இந்தியா

மே 5-ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா

DIN

மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில், சட்ட ரீதியாக மீண்டும் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இது தொடர்பாக இன்று (மே 3)  இரவு 7 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா உரிமை கோரவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனினும் தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதல்வர் வேட்பாளரான மம்தா பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும்,  முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT