தில்லியில் மேலும் 20,960 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் ஒரேநாளில் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் ஒரேநாளில் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 20960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 12,53,902 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 311 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 18,063 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் 11.43 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் பாதித்த 91,859 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.