இந்தியா

கேரளத்தில் மே 8 முதல் 16 வரை முழு ஊரடங்கு

DIN


கேரளத்தில் மே 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கேரளத்தில் கரோனா 2-ம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். 

கேரளத்தில் இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், கரோனா 2-வது அலை மாநிலத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.

தொற்று அதிகரித்து வருவதால் மே 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.  

மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளித்து கரோனா பரவலுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவ வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT