கர்நாடகத்தில் 48 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,930 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,930 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 47,930 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,34,378 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 18,776 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 31,796 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13,51,097 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 5,64,485 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மே 8-ம் தேதி நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 32.71 சதவிகிதம். அதே நாளில் பலியானோர் விகிதம் 1.02 சதவிகிதம்.