அஜித் - ஷாலினியால் உருவான ஹாய்!
ஹாய் திரைப்படம் குறித்து...
ஹாய் திரைப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு “ஹாய்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன், “ஒவ்வொரு ஆணுக்கும் ஷாலினி மாதிரி மனைவி அமைய வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், ஷாலினி கிடைப்பதற்கு முன் அவர்கள் அஜித்தாக இருக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கான ஐடியா. நல்ல வேலையில் இருக்கும் நாயகன் திருமணம் செய்ய விரும்புகிறான். அவனுக்கு விருப்பப்பட்ட மாதிரியே மனைவி அமைகிறார். அந்த மனைவிக்கு பிடித்த மாதிரி அவன் மாறுவதுதான் கதை.
நயன்தாராவுக்கு கவின் ஜோடியா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், நயன் போன்ற ஒருவருக்கு ஜோடியாக நடிக்க தெரிந்த, இயல்பான முகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிகர் கவினைத் தேர்தெடுத்தோம். இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானதுதான். இதன் காதல் தனித்துவமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
director vishnu edavan shares his hi movie idea and plot
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.