உ.பி. அமைச்சர் விஜய் காஷ்யப் கரோனாவுக்கு பலி
உத்தரப் பிரதேச வருவாய்த்துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அமைச்சர் விஜய் காஷ்யப் குர்கான் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச வருவாய்த்துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அமைச்சர் விஜய் காஷ்யப் குர்கான் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
56 வயதாகும் காஷ்யப் முசாபர்நகரின் சர்தாவல் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி குர்கானின் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Advertisement
கரோனா தொற்றுக்கு பலியாகும் மூன்றாவது உ.பி. அமைச்சர் இவராவர். கடந்தாண்டு உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கமல் ராணி வருண், சேதன் சௌகான் ஆகியோர் தொற்றுநோய்க்கு இறந்தனர்.
அவரது மறைவிற்கு பாஜக சார்பில் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.