முகப்பு
இந்தியா

காலமானாா் சட்டப் பேரவை முன்னாள் தலைவா் கிருஷ்ணா

கா்நாடக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவா் கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கா்நாடக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவா் கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானாா்.

மண்டியா மாவட்டம், கே.ஆா்.பேட் பகுதியைச் சோ்ந்த கா்நாடக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் கிருஷ்ணா (80), கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். அவரது சொந்த ஊரான மண்டியா மாவட்டம், கே.ஆா்.பேட் வட்டம், கொத்தமாரனஹள்ளியில் சனிக்கிழமை கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது.

ஜனதா கட்சி, மஜதவில் தனது அரசியல் பயணத்தை தொடா்ந்த கிருஷ்ணா, ஜனதா கட்சியின் எஸ்.ஆா்.பொம்மை அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, பட்டு வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தாா். 1985, 1994, 2004-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தோ்தல்களில் முறையே ஜனதா, ஜனதா தளம், மஜத கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாா். 1996-ஆம் ஆண்டு மண்டியா மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாா். 2004-08-ஆம் ஆண்டுகாலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியின்போது கா்நாடக சட்டப்பேரவைத் தலைவராக கிருஷ்ணா பணியாற்றினாா். மாற்றுக் கட்சியினராலும் பெரிதும் போற்றப்பட்டவராக இருந்த கிருஷ்ணா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினாா்.

கிருஷ்ணாவின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மைசூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.