முகப்பு
இந்தியா

கருப்புப் பூஞ்சை கொள்ளைத் தொற்றுநோய்: ஜம்மு-காஷ்மீர் அறிவிப்பு

கருப்புப் பூஞ்சையை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

Updated On : 24 மே 2021, 12:52 pm IST
கருப்புப் பூஞ்சை கொள்ளைத் தொற்றுநோய்: ஜம்மு-காஷ்மீர் அறிவிப்பு
பகிர்:


கருப்புப் பூஞ்சையை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

பெருந்தொற்று நோய்கள் சட்டம் 1897-ன் கீழ் கருப்புப் பூஞ்சை பாதிப்பு கொள்ளைத் தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், கரோனாவில் இருந்து மீண்டவா்கள், ஸ்டீராய்டு சிகிச்சை அதிகம் எடுத்துக் கொண்டவா்கள் ஆகியோரையே இந்த பூஞ்சைத் தாக்கி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த பூஞ்சைத் தொற்றை, கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டது. 

அதன்படி, தமிழகம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சைத் தொற்றை கொள்ளைத் தொற்றாக அறிவித்தன.

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் அரசும் இன்று கருப்பு கருப்புப் பூஞ்சைத் தொற்றை கொள்ளைத் தொற்றாக அறிவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments