முகப்பு
இந்தியா

மும்பை: முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.55 கோடி வசூல்

மும்பையில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
மும்பை: முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.55 கோடி வசூல்
பகிர்:

மும்பையில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அம்மாநில அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாவிடில் ரூ. 200 முதல் ரூ.500 வரை அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாததால், பொதுமக்களிடமிருந்து இதுவரை ரூ.55 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →