முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 15,284 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,284 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
ஆந்திரத்தில் மேலும் 15,284 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,284 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 15,284 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,09,105 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 20,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,00,754 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 106 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,328 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அந்த மாநிலத்தில் 1,98,023 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →