கரோனா பரிசோதனை மையங்களுக்கு ரூ. 20 லட்சம் அபராதம்
கர்நாடகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதித்த 40 மையங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதித்த 40 மையங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஷ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 10,103 பேரின் கரோனா மாதிரிகளுக்கான முடிவுகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படவில்லை.
அந்த பரிசோதனை மையங்களுக்கு ஒரு நபருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.20,20,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே, தனிபட்ட நபர்களுக்கு கரோனா முடிவுகளைக் கூறிய 5 கரோனா பரிசோதனை மையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.