இந்தியா

மருத்துவக் கட்டணம் செலுத்தாததால் உடல்களைத் தர மறுப்பதா? கர்நாடக அரசு எச்சரிக்கை

DIN


பெங்களூரு: மருத்துவக் கட்டணத்தை செலுத்தாத உறவினர்களிடம், கரோனாவால் பலியானோரின் உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

மருத்துவக் கட்டணத்தை செலுத்தாததால், கரோனாவால் பலியாவோரின் உடல்களைத் தர தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக எழும் புகார் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் கர்நாடக அரசு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், உயிரிழக்கும் கரோனா நோயாளிகளின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்க, எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT