முகப்பு
இந்தியா

தெலங்கானா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி
பகிர்:

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி திட்டத்தை இன்று முதல் தொடங்குமாறு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அருகிலுள்ள அரசு தடுப்பூசி மையத்திற்கு சென்று எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி இருப்பு இல்லாததால் மே 16 அன்று, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று முதல் தடுப்பூசி மீண்டும் செலுத்தப்படுகிறது. 

Advertisement

மேலும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments