நாட்டில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு 
இந்தியா

நாட்டில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

நாட்டில் இதுவரை 11,717 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

DIN

நாட்டில் இதுவரை 11,717 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அனைத்து மாநிலங்களுக்கும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்கும் 29,250 டோஸ் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் டி.வி. சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக, அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையான மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,859 நோயாளிகளும், மகாராஷ்டிரத்தில் 2,770 நோயாளிகளும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

மாறுபட்ட கதையில் ஆல்யா மானசா: பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ!

கதவு திறக்காததால் ஒரு மணி நேரம் ஏர் இந்தியா விமானத்தில் சிக்கித் தவித்த பயணிகள்!

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

SCROLL FOR NEXT