திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ. 52 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 52 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.