கா்நாடகத்தில் மேலும் 20,378 பேருக்கு கரோனா
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் இன்று 20,378 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் இன்று 20,378 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 20,378 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,87,827 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28,053 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 22,17,117 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,42,010 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவுக்கு இன்று மேலும் 382 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 28,679ஆக உயர்ந்துள்ளது. 3,52,731 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.