பெங்களூர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை! செய்யறிவு காரணமா?
பெங்களூர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வில் செய்யறிவு காரணமாக இருந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்த காதல் தம்பதி, அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களது தற்கொலையின் பின்னணியில் செய்யறிவு காரணமாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த இந்த, பானு சந்தர் ரெட்டி (32) - பீபி ஷாஸியா சிரஜ் (31) இருவரும்தான் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோத்தனூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். பானு சந்தர், செவ்வாய்க்கிழமை காலை தன்னுடைய படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த மனைவி பீபி, 18வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, இரபுப் பணி முடிந்து பீபி காலை 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு திறக்கப்படவில்லை. காவலாளியைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பானு சந்தர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. அவரது தற்கொலைக் கடிதமும் கிடைத்துள்ளது.
திடீரென அங்கிருந்து வெளியேறிய பீபி, 18வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].