பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,500, நிப்டி 440 புள்ளிகள் உயர்வு!
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 73,762.43 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 1,505.73 புள்ளிகள் உயர்ந்து 73,453.28 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 443.90 புள்ளிகள் உயர்ந்து 22,775.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைவாரியாக, நிஃப்டி உலோகம் அதிக லாபத்தைப் பெற்று வருகிறது. நிஃப்டி ஐடி, மீடியா உள்ளிட்ட பெரும்பாலான துறை ஏற்றமுடன் உள்ள நிலையில் ஐடி பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.41 சதவீதம், 2.95 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஈரானுடன் போரைத் தொடர்வதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை என்றும் இன்னும் 2-3 வாரங்களில் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து சந்தைகள் இன்று ஏற்றம் கண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.56 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 105.60 டாலராக உள்ளது.