ஆந்திரத்தில் புதிதாக 13 ஆயிரம் பேருக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 13,400 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 13,400 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 84,232 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 13,400 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை16,85,142 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 94 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,832 ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் மேலும் 21,133 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,08,515 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,65,795 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.