பிகார்: கடந்த ஊரடங்கின்போது மகளால் பல கி.மீ. சைக்கிளில் அழைத்துவரப்பட்ட தந்தை மரணம்
தந்தையை சைக்கிளியே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்தியாபிகார்: கடந்த ஊரடங்கின்போது மகளால் பல கி.மீ. சைக்கிளில் அழைத்துவரப்பட்ட தந்தை மரணம்
தந்தையை சைக்கிளியே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
பாட்னா: கடந்த பொதுமுடக்கத்தின்போது குருகிராமில் சிக்கிய தனது தந்தையை சைக்கிளியே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் இந்த தகவலை உறுதி செய்திருப்பதோடு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தேவையான உதவிகளை செய்யுவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, ஆயிரம் கி.மீட்டருக்கும் மேல் சைக்கிளில் தன்னந்தனியாக பயணம் செய்து குருகிராமிலிருந்து தனது தந்தையை தர்மங்காவுக்கு சைக்கிளிலேயே அழைத்து வந்த 16 வயது ஜோதி குமாரி பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டார்.
இவரைப் பற்றி செய்திகள் வெளியான நிலையில், இவருக்கு மிக மதிப்புள்ள சைக்கிள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விளையாட்டுத் துறையில் பயிற்சி அளிக்கவும் உதவிகள் குவிந்தன.