சிறைச்சாலையே பாதுகாப்பானது: பரோலில் செல்ல மறுக்கும் சிறைக்கைதிகள்
சிறையிலிருந்து வெளியேற ஒரு சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 சிறைக்கைதிகள், சிறைச்சாலையே பாதுகாப்பாக இருப்பதாகவும் பரோல் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
லக்னௌ: சிறையிலிருந்து வெளியேற ஒரு சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 சிறைக்கைதிகள், சிறைச்சாலையே பாதுகாப்பாக இருப்பதாகவும் பரோல் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையே தங்களுக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பரோல் வேண்டாம் என்றும் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஒரே ஒரு சிறைச்சாலையில் இருந்தல்ல, சுமார் 9 சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
இது குறித்து சிறை நிர்வாகம் கூறுகையில், தற்போது 90 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டால், இது அவர்களது தண்டனைக் காலம் நிறைவடைவதை அதிகரிக்கச் செய்யும். எனவே பல கைதிகள் பரோலை விரும்பவில்லை.
அது மட்டுமில்லை, இப்போது அவர்கள் வெளியே சென்றால் உணவு கூட கிடைக்காது. இங்கிருக்கும் மருத்துவ வசதிகளும் கிடைக்காது. அதுதான் பரோலை விரும்பாததற்குக் காரணம் என்கிறார்கள்.