முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 

​பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 
பகிர்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

யார்க்ஹூன் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஓனாச் பாலத்தில் ஜீப் ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு  வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மொத்தம் 11 பயணிகளில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். 

சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments