நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தீவிரத்தால் எந்த ஒரு விழாவையும் பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி , ’தீபாவளித் திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் , நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.