முகப்பு
இந்தியா

கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 5 நவம்பர், 2021 at 4:43 PM
கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
பகிர்:

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எத்தகைய ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஜூன் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறி தொழிற்சங்கத்தினர் நள்ளிரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் மாநில அரசு உடனடியாக ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

போக்குரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் கடுமையாக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.