நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 
இந்தியா

நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.43 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், சுமார் 262 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 1.42 லட்சமாகக் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 266 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 31 நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. 

நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 108.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT