மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
மணிப்பூரின் உக்ருல் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூரின் உக்ருல் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் பகுதியில் இருந்து தென்கிழக்கே 56 கிமீ தொலைவில் 70 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Advertisement
மணிப்பூரில் சமீபமாக தொடர்ந்து நிலஅதிர்வு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவானது குறிப்பிடத்தக்கது.