இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு: மகாராஷ்டிரத்தில் நவ. 14 முதல் காங். ஆர்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாராஷ்டிரத்தில் நவம்பர் 14 முதல் 19 வரை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நானா படோல் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேல் கூறியது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சாதாரண மக்களை பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

நவம்பர் 14 முதல் 19 வரை மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT