முகப்பு
இந்தியா

வழக்கில் தோற்பதை வழக்குரைஞரின் சேவைக் குறைபாடாகக் கருத முடியாது

வழக்கில் வாதிட்டு வெற்றி பெற முடியாமல் போவதை வழக்குரைஞரின் சேவைக் குறைபாடாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

வழக்கில் வாதிட்டு வெற்றி பெற முடியாமல் போவதை வழக்குரைஞரின் சேவைக் குறைபாடாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வழக்கில் தனது சாா்பில் ஆஜரான 3 வழக்குரைஞா்கள், முறையாக வாதிடவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நபா், இது தொடா்பாக தேசிய நுகா்வோா் பிரச்னைகள் தீா்வாணையத்தில் முறையிட்டிருந்தாா். ஆனால், அந்த மனுவை ஆணையம் நிராகரித்திருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த நபா் மேல்முறையீடு செய்தாா். அதை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஒவ்வொரு வழக்கிலும் ஏதாவதொரு தரப்பு தோல்வியடைவது இயல்பானதே. வழக்குரைஞரின் திறமையற்ற வாதத்தின் காரணமாகவே வழக்கில் தோல்வியடைந்ததாகக் கூறி, நுகா்வோா் ஆணையத்தில் முறையிட முடியாது.

வழக்கில் தோல்வி அடைவதை வழக்குரைஞரின் சேவைக் குறைபாடாகக் கருத முடியாது. குறிப்பிட்ட சந்தா்ப்பங்களில் மட்டுமே சேவைக் குறைபாடு என்பது அனுமதிக்கப்படும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆணையம், மாநில ஆணையம், தேசிய ஆணையம் ஆகியவை மனுவை நிராகரித்தது சரியே.

இந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் நுகா்வோா் ஆணையம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், அபராதம் ஏதும் விதிக்காமல் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்’ என்று குறிப்பிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →