காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தற்கொலைப் படைத் தீவிரவாதி சுட்டுக்கொலை.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று(நவ.11) தீவிரவாதி பதுங்கியிருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
பலியான தீவிரவாதி அமிர் ரியாஸ் ‘கஸ்வதுல் ஹிந்த்’ அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் 2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.