முகப்பு
இந்தியா

‘டெலி-லா’ செயலி: கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினாா்

மக்களுக்கான ‘டெலி-லா’ கைப்பேசி செயலியை மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மக்களுக்கான ‘டெலி-லா’ கைப்பேசி செயலியை மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

தில்லியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

‘எண்ம இந்தியா’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை மூலம் புதிய இந்தியா உருவாகிறது. எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் டெலி-லா செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது வழக்கு விசாரணைக்கு முந்தைய செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தளமாகும். இந்திய விடுதலையின் ‘அம்ருத் மஹோத்ஸவம்’ கொண்டாடும் இவ்வேளையில், பொது மக்கள் சுயசாா்புடையவா்களாகவும், நீதியை எளிதில் அணுகக் கூடியவா்களாகவும் இருக்கும் வகையில் ஒன்றிணைய வேண்டும்.

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 75,000 கிராம ஊராட்சிகளில் டெலி-லா செயலி விரிவாக்கம் செய்யப்படும்.

வழக்கறிஞா்கள் டெலி-லா இயக்கத்தில் சோ்ந்து சட்ட உதவி சேவைகளுக்கான சட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டம் - நீதித்துறை இணை அமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் கலந்து கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →