ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

ஆணவம் தலைகுனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்: ராகுல்

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

DIN

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரகத்திற்கு ஆணவம் தலைகுனிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

ஆசாத் காஷ்மீரா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா? சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேப்டன்!

ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றம் அமைத்தது

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT