அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாம் மாநிலம், ஹவுகாத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானத தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்
ஹவுகாத்தில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலம், ஜாலோர் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.