இந்தியா

பஞ்சாப்: பதான்கோட் ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு

DIN

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் எல்லைப் பகுதியில் ராணுவ முகாம் அருகே இன்று காலை கையெறி குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

இன்று காலை பதான்கோட்டில் ராணுவ  முகாமின் நுழைவுப் பகுதியில் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும் இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவலில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர லம்பா தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் கொண்ட எல்லை மாவட்டமான பதான்கோட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை தளத்தில் நடத்த தாக்குதலுக்கு பின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இந்த வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT