முகப்பு
இந்தியா

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் லாலு ஆஜா்

கால்நடைத் தீவன ஊழல் தொடா்பான வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
கோப்புப்படம்
பகிர்:

கால்நடைத் தீவன ஊழல் தொடா்பான வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

பங்கா மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து ரூ.1 கோடியை லாலு பிரசாத் கையாடல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசாதுக்கு நீதிபதி பிரஜேஷ் குமாா் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, நீதிபதி முன்னிலையில் அவா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானாா். அடுத்த விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

இதுகுறித்து லாலு பிரசாதின் வழக்குரைஞா் கூறுகையில், ‘அடுத்த வாரம் வழக்கின் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும். அன்றைய தினம் லாலு பிரசாத் நேரில் ஆஜராக தேவையில்லை. இருப்பினும் நீதிமன்றம் அழைக்கும்போது அவா் நேரில் ஆஜராவாா்’ என்றாா்.

கால்நடைத் தீவன முறைகேடு தொடா்பான மேலும் சில வழக்குகளில் லாலு பிரசாத் ஏற்கெனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தற்சமயம், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அவா், தில்லியில் தனது மகள் மிசா பாரதி வீட்டில் தங்கியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →