இந்தியா

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாளை கூடுகிறது காங். நாடாளுமன்ற திட்டக் குழு

DIN

குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற திட்டக் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நவ. 29-ஆம் தேதி முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற திட்டக்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT