முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

காஷ்மீர்: பறிமுதல் செய்த வெடிகுண்டுகளை அழித்த காவல்துறை

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

இந்தியா

காஷ்மீர்: பறிமுதல் செய்த வெடிகுண்டுகளை அழித்த காவல்துறை

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்தும் தேடுதலிலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ரீசி மாவட்டக் காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ’ கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன . நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தற்போது இவை அழிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரியான வழிமுறையைப் பின்பற்றி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் , ஐஈடி , ரீமோட் ஐஈடி மற்றும் 71 கையெறி குண்டுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →