இந்தியா

காஷ்மீர்: பறிமுதல் செய்த வெடிகுண்டுகளை அழித்த காவல்துறை

DIN

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்தும் தேடுதலிலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ரீசி மாவட்டக் காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ’ கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன . நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தற்போது இவை அழிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரியான வழிமுறையைப் பின்பற்றி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் , ஐஈடி , ரீமோட் ஐஈடி மற்றும் 71 கையெறி குண்டுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT