இந்தியா

மம்தா பானர்ஜியுடன் சஞ்சய் ரௌத், ஆதித்ய தாக்கரே சந்திப்பு

DIN


சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ஆதித்ய தாக்கரே கூறியது:

"அவரை (மம்தா) மும்பைக்கும், மகாராஷ்டிரத்துக்கும் நாங்கள் வரவேற்றோம். எப்போதுமே நட்பு இருந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை வந்தபோதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஆனால், அவரை மும்பைக்கு வரவேற்பதற்காகவே வந்தோம்."

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT