இந்தியா

மம்தா பானர்ஜியுடன் சஞ்சய் ரௌத், ஆதித்ய தாக்கரே சந்திப்பு

​சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

DIN


சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ஆதித்ய தாக்கரே கூறியது:

"அவரை (மம்தா) மும்பைக்கும், மகாராஷ்டிரத்துக்கும் நாங்கள் வரவேற்றோம். எப்போதுமே நட்பு இருந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை வந்தபோதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஆனால், அவரை மும்பைக்கு வரவேற்பதற்காகவே வந்தோம்."

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT