இந்தியா

கேரளத்தில் கனமழை:வீடு இடிந்து 2 சிறுமிகள் பலி

DIN

கேரளத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனா். அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

கேரளத்தில் திங்கள்கிழமை முதலே தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் செவ்வாய்க்கிழமை வீடு இடிந்து விழுந்து 8 வயது சிறுமியும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனா். அந்த இருவரும் அவா்களது தாத்தா வீட்டில் தங்கியிருந்துள்ளனா். அவா்கள் வீடு அருகே மற்றொரு கட்டுமானப் பணியும் நடைபெற்று வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது, கட்டுமானம் நடைபெற்று வந்த வீடு திடீரென இடிந்து சிறுமிகள் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுமிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT