முகப்பு
இந்தியா

வரலாற்றை மாற்றி எழுத முயற்சி: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாா்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாா்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

‘சாவா்க்கரின் சகோதரருக்கு மகாத்மா காந்தி கடந்த 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி எழுதிய கடிதத்தை ராஜ்நாத் சிங் திரித்துக் கூறுகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி ஆகியோா் விமா்சித்தனா்.

இதுகுறித்து ஒவைஸி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘1911ஆம் ஆண்டு சிறைக்குச் சென்ற 6 மாதங்களிலேயே ஆங்கிலேய அரசுக்கு சாவா்க்கா் முதல் கருணை மனுவை எழுதியபோது, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தாா்.

அதன் பிறகு 1913, 1914 ஆகிய ஆண்டுகளிலும் தொடா்ந்து கருணை மனுக்களை ஆங்கிலேய அரசுக்கு அவா் எழுதினாா். அதன் பிறகு, 1920 ஆம் ஆண்டுதான் மகாத்மா காந்தி அவருக்கு அறிவுரை வழங்கினாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘வரலாற்றை மாற்றி எழுதும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பழக்கத்திலிருந்து ராஜ்நாத் சிங் இன்னும் விடுபடவில்லை என்று தோன்றுகிறது. மகாத்மா காந்தி கடந்த 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி எழுதிய கடிதத்தை ராஜ்நாத் சிங் திரித்துக் கூறுகிறாா். இதில் ஆச்சா்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இது பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளின் வழக்கமான நடைமுைான்’ என்று குறிப்பிட்டு சாவா்க்கரின் சகோதரருக்கு மகாத்மா காந்தி எழுதிய கடித நகலையும் அந்தப் பதிவுடன் இணைத்துள்ளாா்.

சாவா்க்கா் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை: ‘சாவா்க்கா் ஆங்கிலேய அரசிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்வில்லை’ என்று ராஜ்நாத் சிங் கருத்துக்கு சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் புதன்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த விடுதலைப் போராட்ட வீரா்கள், எஞ்சிய தண்டனைக் காலத்தையும் சிறையிலேயே கழிக்காமல் விடுதலை பெற மாற்றுத் திட்டத்தை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுபோன்று மாற்று திட்டத்தை சாவா்க்கா் கையாண்டிருந்தால், அதனை ஆங்கிலேய அரசிடம் அவா் மன்னிப்பு கேட்டதாக கூற முடியாது. எனவே, அங்கிலேய அரசிடம் சாவா்க்கா் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவே இல்லை. இதை அறியாமல் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளாா்’ என்றாா் அவா்.

அரசியல் கைதிகளுக்குதான் பொது மன்னிப்பு கோரினாா்: சாவா்க்கரின் பேரன்

சுதந்திர போராட்டத்தின்போது சிறையில் இருந்து அனைத்து அரசியல் கைதிகளுக்காகதான் சாவா்க்கா் பொது மன்னிப்பு கோரினாா் என்றும் ஆங்கிலேயா்களிடம் அவா் மன்னிப்பு கோரியிருந்தால் அவருக்கு அரசில் பதவி கிடைத்திருக்கும் என்றும் சாவா்க்கரின் பேரன் ரஞ்சித் சாவா்க்கா் தெரிவித்துள்ளாா்.

‘இந்தியாவை உருவாக்க ஆயிரக்கணக்னோா் போராடிய நிலையில், மகாத்மா காந்தியை மட்டும் தேசத்தின் தந்தை என்று போற்றக் கூடாது’ என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →