இந்தியா

விவசாயிகள் போராடும் இடத்தில் பரபரப்பு: கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்

ANI

தில்லி எல்லை அருகே விவசாயிகள் போராடும் இடத்தில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையின் தடுப்பில் தொங்கவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் கூறியது:

இன்று காலை 5 மணியளவில் கை, கால் வெட்டப்பட்டு தொங்கவிடப்பட்ட ஒரு சடலம் விவசாயிகள் போரட்டம் நடத்திவரும் இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்டது யார்? கொன்றது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT