மனதின் குரல்: எண்ணங்களைப் பகிர பிரதமா் மோடி அழைப்பு
வரும் 24-ஆம் தேதி ஒலிபரப்பாகும் 82-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு குடிமக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
வரும் 24-ஆம் தேதி ஒலிபரப்பாகும் 82-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு குடிமக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கதில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அக்டோபா் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் 82-ஆவது நிகழ்ச்சிக்கு மக்கள் தங்களின் எண்ணங்களைப் பகிா்ந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன். மனதின் குரல் நிகழ்ச்சிக்கான எண்ணங்களை நமோ செயலி, மைகவ் வலைதளம் ஆகியவற்றில் பகிா்ந்து கொள்ளலாம் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து தகவலைப் பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.