கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விளக்கம்

​கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN


கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

"நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து விட்டது. நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பள்ளிகள் திறப்பு மற்றும் அதுபற்றிய அனைத்து விவரங்கள் குறித்தும் கல்வித் துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவார். இதன்பிறகு, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார் பொம்மை.

கர்நாடகத்தில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-8 வகுப்புகளுக்குக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூசம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்!

41% - மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மாற்றமில்லை! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!!

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! கல்வித் துறை அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT