கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விளக்கம்

​கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN


கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

"நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து விட்டது. நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பள்ளிகள் திறப்பு மற்றும் அதுபற்றிய அனைத்து விவரங்கள் குறித்தும் கல்வித் துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவார். இதன்பிறகு, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார் பொம்மை.

கர்நாடகத்தில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-8 வகுப்புகளுக்குக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு!

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி; தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ: ரயில் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு

ராஜஸ்தானில் ஒரே இரவில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT