புதிய கட்சியைத் தொடங்குகிறார் அமரீந்தர் சிங்: ஊடக ஆலோசகர்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.
அமரீந்தர் சிங் கருத்தாகப் பதிவிடப்பட்டுள்ள ரவீன் துக்ரல் ட்விட்டர் பதிவுகள்:
"பஞ்சாப் எதிர்காலத்துக்கான போர் தொடங்கிவிட்டது. பஞ்சாப் மக்கள் நலனுக்காகவும் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஓராண்டுக்கும் மேல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் செயல்பட எனது புதிய கட்சியைத் தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.
விவசாயிகள் நலனுக்காக அவர்களது போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் 2022 பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம்.
இதையும் படிக்க | போலி மதிப்பெண் சான்றிதழ்: பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறை
பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வரை நான் ஓயமாட்டேன். அரசியல் நிலைத்தன்மையும், உள் மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் தான் பஞ்சாபுக்குத் தேவை. அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்."
முன்னதாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, மத்திய உள்துறை அமித் ஷாவை தில்லியில் நேரில் சந்தித்தார்.