முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நாட்டை ஏமாற்றி ஏழை மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க முடியாது: மோடி உறுதி

தரகர்களோ ஊழலோ இன்றி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா

நாட்டை ஏமாற்றி ஏழை மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க முடியாது: மோடி உறுதி

தரகர்களோ ஊழலோ இன்றி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டை ஏமாற்றுபவர்களும் ஏழை மக்களிடம் கொள்ளைடிப்பவர்களும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, "ஊழல்கள் சிறிதயாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது மற்றவரின் உரிமைகளைப் பறிக்கிறது. 

நாட்டின் குடிமகனின் உரிமைகளை பறிக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்தை தடுக்கிறது. ஒரு தேசமாக நமது கூட்டு பலத்தையும் பாதிக்கிறது. நாட்டை ஏமாற்றியவர்கள், ஏழைகளை கொள்ளையடிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டில் மற்றும் உலகில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு இனி இரக்கம் காட்டப்படாது என அரசு நம்புகிறது.

இடைத்தரகர்கள் இல்லாமல் ஊழல் நடைபெறாமல் அரசின் திட்டங்களால் தங்களால் பயனடைய முடியும் என்று இப்போது மக்கள் நம்புகின்றனர். ஏமாற்றுபவர்களால் இனி தப்பிக்க முடியாது என மக்களும் இப்போது நம்புகிறார்கள். 

ஊழல், அமைப்பின் ஒரு பகுதி என்பதை புதிய இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வெளிப்படையான அமைப்பு, திறன்மிக்க செயல்முறை, சுமுகமான நிர்வாகம் ஆகியவற்றையே அவர்கள் விரும்புகின்றனர்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →