முகப்பு
இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கு:காங். எம்எல்ஏ மகன் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது செய்யப்பட்டாா்.

உஜ்ஜைன் மாவட்டத்தைச் சோ்ந்த பட்நாகா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முரளி மோா்வால். இவரின் மகன் கரண் மோா்வால் (30). ‘திருமணம் செய்வதாகக் கூறி தன்னை கரண் மோா்வால் பாலியல் பலாத்காரம் செய்ததாக’ இந்தூரில் உள்ள மகளிா் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகாா் அளித்தாா். இப்புகாரின்பேரில் கடந்த ஏப். 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு கரண் மோா்வால் தலைமறைவானாா். இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாஜபூா் மாவட்டம், மாக்சி நகா் அருகே காரில் சென்று கொண்டிருந்த கரண் மோா்வாலை தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவருடன் ராகுல் ராத்தோா் என்பவரும் கைது செய்யப்பட்டதாக மகளிா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஆய்வாளா் ஜோதி சா்மா தெரிவித்தாா்.

நீதிமன்றத்தில் கரண் மோா்வாலை ஆஜா்படுத்தவுள்ள போலீஸாா், அவா் தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றாா், அவருக்கு யாா் உதவினாா்கள் என்பதைக் கண்டறிவதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.