முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா: இதுவரை 3.42 கோடி பேருக்கு பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது 

நேற்று முன் தினம் 14,306 பேரும், நேற்று 12,428 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.27) சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் புதிதாக 13,451 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 585 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,653-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 14,021 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக்க கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,97,339-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும்  1,62,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாடு முழுவதும் இதுவரை 1,03.53 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →