ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் தாத்ரியிலிருந்து தோடா நோக்கிச் சென்ற மினி பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 பேர் பலியானதோடு 12 பேர் காயடைந்தனர். உடனடியாக மீட்புபடையினர் உதவியுடன் உடல்கள் கைப்பற்றப்பட்டதோடு காயமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அம்மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கலையும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்பவர் நலமடைய பிராத்திக்கிறேன் எனத் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.