இந்தியா

உத்தரகண்ட் விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு

DIN

உத்தரகண்ட் வாகன விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் அருகே சக்ரட்டா பகுதியில் 300 அடி பள்ளத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT