முகப்பு
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
இந்தியா

தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாத மாவட்டங்கள்; ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி

ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியா

தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாத மாவட்டங்கள்; ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி

ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பகிர்:

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களின் அலுவலர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம்தான், 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இது புதிய இந்தியாவை பிரதிபலிக்கிறது என மோடி குறிப்பிட்டிருந்தார். 50 சதவிகிதத்திற்கும் குறைவாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்ட அலுவலர்களிடமும் இரண்டாம் தவணை மிகக் குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்ட அலுவலர்களிடமும் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் கலந்துரையாடுவார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்.

அரசு வெளியிட்ட தகவலின்படி, 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வயது வந்தோரில் நான்கில் மூன்று சதவிகிதத்தினர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 30 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று ரோமில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், தொற்றுநோய்க்கு எதிரான போரில் உலகிற்கு உதவ இந்தியா ஒரு பில்லியன் தவணைகளை நிர்வகித்துள்ளது என்றும் அடுத்தாண்டு இறுதிக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி அளவை தயாரிக்க தயாராக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவை விட அதிக தடுப்பூசிகளை தயாரித்த ஒரே நாடு அண்டை நாடான சீனாவாகும். செப்டம்பர் பிற்பகுதியில் சுமார் 1.05 பில்லியன் அல்லது 75 சதவீத குடிமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது. வயது வந்தோருக்கு இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடுவதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →