முகப்பு
இந்தியா

கேரளத்தில் படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் பலி

கேரளத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் 4 மீனர்வர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கேரளத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் 4 மீனர்வர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

கேரளம் மாநிலம் கொல்லத்திலிருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் படகு ஒன்றில் மீனவர்கள் மீன்பிடித்து கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 4 மீனவர்கள் நீரிழ் மூழ்கி பலியானார்கள். 

மேலும் 12 மீனவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய அலை மற்றும் மீன்பிடி வலை படகில் சிக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இச்சம்பவத்தின் போது 16 பேர் படகில் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →